Tuesday, 29 September 2020

Al-Quran (சூரா அல்-ஹாக்கா, அத்தியாயம் 69, வசனம்/1,2,3,4,5,6,7)

            

          அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்                                          அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்)


உறுதியாக நடந்தேரக்கூடியதான மறுமை நாளானது, உறுதியாக நடந்தேரக்கூடியது என்ன? உறுதியாக நடந்தேரக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது? ஸமூது கூட்டத்தினரும் ஆது கூட்டத்தினரும்  இதயங்களை திடுக்கிடச்  செய்யக்கூடியதை மறுமை நாளைப் பெய்யாக்கினர்.

ஆகவே ஸாலிஹ் நபியின் கூட்டத்தாராகிய ஸமூது ஒரு பெரிய சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர், இன்னும் ஹூது நபியின் கூட்டத்தாரகிய ஆது பெரும் சப்தத்தோடு கடுங்குளிர் கலந்த கொடுங்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர். ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி வீசச் செய்து இருந்தான் ஆகவே நபியே அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின் அவற்றில் அக் கூட்டத்தினரை நிச்சயமாக அவர்கள் அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்ச மரங்களைப்போன்று பிணங்களாகக் கிடப்பதை நீர் காண்பீர்.

சூரா அல்-ஹாக்கா
(அத்தியாயம் 69, வசனம்/1,2,3,4,5,6,7)



No comments:

Post a Comment

Al-Quran (சூரா அல்-முத்தஸ்ஸிர் (அத்தியாயம் / 74 வசனம்38,39,40,41,42,43,44,45,47)

  அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்                                           அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்) ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம...