Tuesday, 30 June 2020

Al-Quran (அத்தியாயம் - 96 / வசனம்-10,11,14,15,16)


அளவற்ற அருளானன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால் ஓதுகிறேன்
ஓர் அடியாரை அவர் தொழுது கொண்டிருக்கும் பொழுது, அவர் நேர்வழியின் மீதிருந்தும் (அவரை தொழவிடாமல் தடுத்தவனை) நீர் பார்த்தீரா? நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
(முஹம்மது  தொழுதால் நான் அவர் கழுத்தின் மீது மிதிப்பேன் என அபு ஜஹல் கூறியவாறு)  அல்ல  (இத்தீய செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடின், நிச்சயமாக (அவனது) முன்னெற்றி உரோமத்தைப்பிடித்து நாம் இழுப்போம்,
தவறிழைத்து  பொய்யுரைக்கும்  முன்னெற்றி உரோமத்தை.

(அத்தியாயம் - 96 / வசனம்-10,11,14,15,16)



Monday, 29 June 2020

Al- Quran (அத்தியாயம் -98/ வசனம்-7,8)(chapter - 98/ verses -7,8)


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்  பெயரால் ஓதுகின்றேன்

நிச்சயமாக விசுவாசங்கொண்டு, நற்செயல்களையும்  செய்கின்றார்களே அத்தகையோர்தாம் படைப்புக்களில் சிறந்தவர்கள்,
அவர்களுடைய நற்கூலி அவர்களின் இரட்சகனிடம் (அத்னு) எனும் நிலையான சுவனங்களாகும், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், என்றென்றும்  (அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்கி)இருப்பார்கள், அல்லாஹ்வும் அவர்களை  பொருந்திக் கொண்டான், அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள், அது எவர் தன் இரட்சகனுக்கு பயப்படுகிறாரோ அவருக்குறியதாகும்,

(அத்தியாயம் -98/ வசனம் -7,8)

In the name of allah the most gracious, the most merciful

Verily, those who believe (in the oneness of allah and in his messenger muhammed (SW) including all obligation ordered by islam) and do right us good deeds, they are the best of creatures.
Their reward with their lord is Adn ( Eden) paradise( gardens of eternity)underneath wic rivers flow, they will abide therein forever. Allah will be pleased with them and they with him; That is for him wo fears his lord.
(Chepter - 98 / Verses - 7,8) 

 


Sunday, 28 June 2020

Al-Quran (அத்தியாயம் - 99 , வசனம் - 1,6,7,8)/ (Chapter - 99, Verses - 1,6,7,8)


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்)

பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அது அசைக்கப்பட்டு விடும் போது (அவ்வாறு பூமி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்) அந்நாளில் மனிதர்கள்  அவர்களின்  செயல்கள் ( அவர்களுக்கு காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக (மண்ணறைகளிலிருந்து ) திரும்புவார்கள்,

எனவே எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அதன் பயனைக் கண்டுகொள்வார்,

எனவே எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அதன் பயனைக் கண்டுகொள்வார்,

(அத்தியாயம் - 99 , வசனம் - 1,6,7,8)


In the name of allah the most gracious, the most merciful

When the earth is shaken with its (Final) earth quake. That day mankind will proceed in scattered group that they may be shown their deeds. So whosoever does good equal to the weight of an atom ( or a small ant) shall see it. And whosoever does evil equal to the weight of an atom 
( or a small ant) shall see it.
(Chapter - 99, Verses - 1,6,7,8)




Saturday, 27 June 2020

Al-Quran (அத்தியாயம் - 104 , வசனம் - 3,4)


நிச்சயமாக மனிதன் தன் பொருள் தன்னை ( என்றென்றும் உலகில் ) நிலைத்திருக்க செய்யுமென்று எண்ணுகின்றான்,

(பொருளை சேகரித்து வைத்துக்கொண்டு உலகில் அவனை நிலைத்திருக்க செய்யுமென்று எண்ணியிருந்தானே )  அவ்வாறான்று ( அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவன் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நரக  நெருப்பில் எறியப்படுவான்.
(அத்தியாயம் - 104 , வசனம் - 3,4)


 

Friday, 26 June 2020

Al-Quran (அத்தியாயம் - 103 / வசனம் - 03)



விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும்  செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம்  செய்தும்  ( பாவங்களை விடுவதிலும், நன்மைகளை செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களை சகித்து )  பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கின்றார்களே அத்தகையோரைத் தவிர நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

(அத்தியாயம் - 103 / வசனம் - 03 )
 

 

 


வாழ்ந்த காலத்தை விட வாழும் காலம் குறைவு இறையச்சத்தோடு நடந்து  கொள்ளுவோம் "நீங்கள் அறியாதவன்னம் மரணம் உங்களை வந்தடையும்"



Welcome



அழ்ழாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......



Al-Quran (சூரா அல்-முத்தஸ்ஸிர் (அத்தியாயம் / 74 வசனம்38,39,40,41,42,43,44,45,47)

  அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்                                           அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்) ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம...