அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஓதுகிறேன்
(அளவையிலும் , எடையிலும் மோசம் செய்து) குறைக்கக்கூடியவர்களுக்கு கேடு உண்டாவதாக அவர்கள் எத்தகையோர் என்றால்(தங்களுக்காக)மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால், நிறைவாக (அளந்து )வாங்கிக் கொள்கின்றனர்( ஆனால்) தங்கள் அவர்களுக்கு (மற்ற மனிதர்களுக்கு) அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும்( குறைத்து மோசடி செய்து அவர்களை )நஷ்டப்படுத்தி விடுகின்றனர். அத்தகையோர் நிச்சயமாக தாம் (மறுமையில் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வில்லையா? மகத்தான ஒரு நாளைக்காக(அந் நாளே ) அகிலத்தாரின் இரட்சகள் முன்னிலையில் நிற்கும் நாள்.
(அத்தியாயம் -83 / வசனம் -1,2.3.4.5.6)

No comments:
Post a Comment