அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
அன்றியும் அவர்கள் இம்மையில் கஷ்டங்களை சகித்து பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும் அணிவதற்குப் பட்டாடையையும் அவர்களுக்கு அவன் நற்கூலியாக வழங்குகிறான் ,
அவர்கள் அச்சுவனத்தில் ஆசனங்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் அதில் சூரிய வெப்பத்திைனையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்,
அதன் மரங்களின் நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியவையாக இருக்கும் அதன் கனிகள் அவர்கள் பறிப்பதற்கு ஏற்றவாறு தாழ்வாக தாழ்த்தப்பட்டுள்ளது,
சூரா அத்தஹ்ரு (காலம்)
அத்தியாயம் - 76 வசனம் 12,13,14
Al- Quran Sura Al -Qiyamah (அத்தியாயம் 75 வசனம் 16,17,18,19,20,21,26)
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
(நபியே வஹீமுலம் அறிவிக்கப்படுபவை தவறிவிடுமோ என பயந்து ) அதற்காக நீர் அவசரப்பட்டு உம் நாவை அசைக்காதீர். (உம் உள்ளத்தில் ) அதனை ஒன்று சேர்ப்பதும் ,(உமது நாவால் ) அதனை ஓதச்செய்வதும் நிச்சயமாக நம்மீதான கடமையாகும். ஆகவே(ஜிப்ரீல் முலம்) அதனை நாம் (உமக்கு ) ஓதுவோமாயின்,(ஓதப்படும்) அதன் ஓதுதலை நீர் பின் தொடர்ந்து ஓதுவீராக. பின்னர் நிச்சயமாக அதனை தெளிவு செய்வதும் நம்மீதான கடமையாகும்,
ஏன் இல்லை பின்னர் (மனிதர்களே) நீங்கள் அவசரமானதை (இம்மையை) விரும்புகின்றீர்கள், அன்றியும் மறுமையை நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள்.(மறுமைநாள் வெகுதுாமென நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களே) அவ்வாறல்ல (இதோ அதன் தொடக்கமாக மரணவேளையில் அவனது உயிர்) தொண்டை குழியை அடைந்து விட்டால்.
(அத்தியாயம் 75 வசனம் 16,17,18,19,20,21,26)
சூறா அல் கியாமா (அத்தியாயம்/75 )
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
மனிதன் (இறப்பெய்தி , மண்ணோடு மண்ணாக மக்கிக்போன பின்னர்) அவனுைடய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவேமாட்டோம் என்று எண்ணுகின்றானா? , ஆம் அவனுடைய விரல்களின் நுனிகளை (முன் பிருந்தது போல் இணைத்துச் சரிப்படுத்தி செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம், மாறாக மனிதன் தன் எதிர்காலத்திலும் (பாவத்திலிருந்து விலகிவிடாது ) பாவம் செய்யவே நாடுகிறான், மேலும் மறுமை நாள் எப்பொழுது (வரும்)? என (அதிசயமாக ) அவன் கேட்கிறான்,
(அத்தியாயம் /75 , வசனம் 3,4,5,6)
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்) ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம...